
உலக முன்னாள் கால்பந்து ஜாம்பாவான்களான அர்ஜெண்டினாவின் மராடோனா மற்றும் பிரேசிலின் ஸிக்கோ லஜெண்டா எப்சி 2022 ( டுநபநனேயள குஉ 2022 ) சூழல் கிண்ண கால்பந்துப் போட்டியில் பிரேசில் 4 -3 எனும் கோலில் பிரேசிலை தோற்கடித்து வாகை சூடியது. ஸிக்கோ – மராடோனா லஜெண்டா எப்சி அணிகளுக்கான இந்த கால்பந்துப் போட்டி பேரா சுங்கை சிப்புட் எம்டிகேகே மைதானத்தில் மாலை 5 .00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.அப்பளநாயுடு மற்றும் குமரவேல் ஆகியோர் இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இப்போட்டிக்கு மலேசியக் கால்பந்து சங்கத்தின் முதல்நிலை நடுவர்களான பேரா மாநிலத்தைச் இரட்டை சகோதரிகள் எம்.நர்மதா மற்றும் நித்வியா இருவரும் நடுவர்களாக சிறப்பான முறையில் பணியாற்றினர்.பல வர்த்தக நிறுவனங்கள்,இயக்கங்களின் ஆதரவுடன் நடைபெற்ற இப்போட்டி நிகழ்வில்,பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவரும்,மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவருமான ஸ்ரீ சங்கர் சிறப்பு பிரமுகராகக் கலந்துக் கொண்டார்.